தமிழ், ஆன்மிகம், பேரறிவு பற்றிய கருத்து தெளிவு கொணரும் முயற்சி.
நாங்கள் தமிழ் புலவர்களும் அல்ல. ஆய்வாளர்களும் அல்ல. இலக்கிய வாதிகளும் அல்ல.
ஆனால் மக்கள் தமிழ் மொழியினை எவ்வாறு புரிந்துள்ளனர் என்றும், மேற்கண்ட பெரியோர் எவ்வாறு அறிந்துள்ளார்கள் என்றும், மேலும் மொழியினை தோற்றிவித்தவர்கள் எந்த நிலையில் இருந்து தோற்றிவித்தார்கள் என்றும் நாங்கள் சிறிது அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளோம். அந்த அறிவை கொண்டு தமிழின் பெருமை, தமிழ் சமுதாயத்தின் பெருமைப் பற்றி சற்று மாற்று (அ ) உண்மை கோணத்தில் சிந்திக்கவும், தமிழ் மொழின் ஆழத்தை சற்று தெரிந்து கொள்ளவும், தமிழ் மொழியிணை சிறிதள வேனும் புரிந்து கொண்டாள் குழந்தை உற்பத்தி யாவதிலிருந்து உடலாலும், உள்ளத்தாலும் சிறப்பாக வாழ்ந்து, இந்த உலகத்தை ஏகபோகமாக அனுபவித்து, உடலை காய கற்பமாக்கி, சித்துக்களை அனுபவித்து, நாம் விரும்பும் காலம் வரை இந்த பூத உடலுடன் வாழ்ந்து என்றும் இறவா நிலையாகிய இறை நிலையினை அடையலாம், அந்த உணர்வை உருவாக்க இந்த பகுதியினை தொடங்கியுள்ளோம்.
இது யாரையும் குறை கூறவோ அல்லது ஒருவரின் மனதை புண்படுத்தும் நோக்கில் அமைக்கப் பட்டதல்ல என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். நன்றி. இந்த பகுதியை தொடர்ந்து படித்தீர்கள் என்றால் ரசவாத கலை, பிராணாயாமம், யோகம் மேலும் இது போன்ற வைகளைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ளவும் , அனுபவத்திற்கு கொண்டு வரவும் முடியும் .
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்குடி"
புறப்பொருள் வெண்பாமாலை
.
"ஆறிலும் சாவு நூறிலும் சாவு." சான்றோர்கள் வாக்கு.
"மந்திரம் கால் மதி முக்கால்" சித்தர் வாக்கு.
"சாகாத்தலை ,வேகாக்கால், போகாப்புனல்." சித்தர்கள்பரிப்பாடை.
"விதியை மதியால் வெல்லலாம்." சொல்வழக்கு.
"கடவுள். ஆலயம். விசுவாசம். விசுவாசி." தெரிந்த சொற்கள்.
"கைலாயம். வைகுண்டம். கோயில். முக்தி. "
"பொறுத்தார் பூமி ஆள்வார், பொங்கினார் காடு ஆள்வார்."
"நாசியில் சுவாசமிடு கிரவனை நம்பாதே." ஏசு நாதர்.
"பிரணவம், ரசவாதம், சீவன் முக்தன். " சித்தர்கள் மொழி.
"சிர சீவியாய் வாழ்க."
"சரம் பார்ப்போனே பரம் பார்ப்பான்"
"கீழ்கதி, மேல்கதி" யாது ?
"மூலம், மூலாதாரம் எது ?"
"சித்தன் போக்கு சிவன் போக்கு."
"சித்தாந்தம், நாதாந்தம், வேதாந்தம்."
"வடக்கு நோக்கி தவமிருத்தல்."
"சிவா, வாசி. நசி, மசி."
"ஓம் காரம். பூரணம்."
"இயல், இசை, நாடகம்."
"குருவருளிருந்தால் திருவருள் கிடைக்கும்".
"சும்மா இரு."
"சிவாய நம. நமசிவாய."
"சும்மா இருந்து சுகம் பெறு" எவ்வாறு?
"தலை கால் புரியாம அலைகிறான்."
"ஏசு விழாவில் நட்சத்திர சின்னம் ஏன்?"
"நல் வினை தீ வினை எது ?"
"பாவம் புண்ணியம் எது ?"
"அஞ்சன மை எது?"
"விட்ட குறை தொட்ட குறை எது?"
"காலன். ( எமன் பாச கயிறு ) விளக்கம்.
"பூரகம், ரேசகம், கும்பகம்" உண்மை பொருள்.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்."
"முஸ்லிம்கள் மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?"
"செம்மொழி" உண்மை விளக்கம்.
"தர்மமும் உண்மையும்." விளக்கம்.
"மனதார வாழ்த்துகிறேன்." இதன் பொருள்.
''மறு பிறவி என்றால் என்ன?"
"ஏழு பிறவிகள் என்ன? என்ன?"
"மெய் ஞானம் என்றால் என்ன?"
இதற்க்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள், அறிஞர்கள் என்ன கருத்து கொண்டுள் ளார்கள், மொழி தோற்று வித்தோர் என்ன நோக்கோடு தோற்றி வித்தார்கள் என்பதை நீங்கள் அந்த அந்த நிலையிலிருந்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.
சரியான கருத்துக்களை, தெரிவிப்பவர்களின் பெயருடன் அவை வெளியிடப்படும். இதனால் அவர்கள் தன்னை மேம்படுத்தி கொள்வது மட்டு மல்லாமல், தமிழுக்கும், மக்களுக்கும் நல்ல தொண்டு செய்தவர்கள் ஆவீர்.
எவ்வாறாயினும் இதன் உண்மையான விளக்கத்தை வெளியிடுவோம். இருப்பினும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
புதியது புதிதான இது போன்ற வற்றை வாரம் ஒரு முறையோ அல்லது இருவாரம் ஒரு முறையோ வெளியிடபடும் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
மீண்டும் சந்திப்போம்.
மேலும் எங்களது வேறு வலை தளத்தை காண கீழே சொடுக்கவும்
அல்லது
To contact
e-mail ; vthegreatvp@gmail.com
Phone; 93 600 98 510.
siddhargal sonnathu pothum neenga unga anupavathula ethavathu sollunga sir
ReplyDeleteசிவபிரகாசம் அவர்களே முதலில் உங்க பேரை மாத்துங்க ஒருவரின் பெருமுயற்சியையும் ஆன்மீக தேடலையும் மதிக்க தெரியாத நீங்கள் ஆன்மீகத்தில் இறங்குவதே தவறு சித்தர்கள் சொன்னது போதும் என்கிறீர்களே அப்படி என்றால் உங்களுக்கு அதை விட பெரிய தேடுதல் இருப்பதாகத்தானே அர்த்தம் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உங்களுக்கு எதுவுமே மனநிறைவு தராது என்பது புரிகிறது.
Delete